பாடம் 3 
அ முதல் ஔ வரையுள்ள 12 உயிரெழுத்துகளும், 'க்' முதல் 'ன்' வரையுள்ள 18 மெய்யெழுத்துகளும் ஆகிய முப்பதும் முதலெழுத்துகள் எனப்படும் 
 * உயிரெழுத்துகள்:  
உயிரெழுத்துகள் 12 அவை: 
 அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ 
 
 உயிரெழுத்துக்கள் குறில், நெடில் என இரண்டு வகைப்படும். 
 
 குறில்  
குறுகிய ஓசை உடையவை. அவை : அ,இ,உ,எ,ஒ 
 நெடில் 
நெடிய ஓசை உடையவை . அவை : ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ,ஔ 
  
 * மெய்யெழுத்துகள்:  
மெய்யெழுத்துகள் 18 அவை:  
 க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற்,ன் 
 
 மெய்யெழுத்துக்கள் மூன்று வகைப்படும். அவை: 
 
வல்லினம் : க், ச், ட், த், ப், ற் 
மெல்லினம்: ங், ஞ், ண், ந், ம், ன் 
இடையினம்: ய், ர், ல், வ், ழ், ள் 
  
 
ஒரு மெய் எழுத்துடன் ஓர் உயிர் எழுத்து சேர்ந்து பிறக்கக்கூடிய எழுத்து உயிர்மெய் எழுத்து ஆகும். 
 
எடுத்துக்காட்டு: 
'க்' என்னும் மெய்யும் 'அ' என்னும் உயிரும் சேர்வதால் 'க' என்னும் உயிர்மெய் பிறக்கின்றது. இவ்வாறு பன்னிரண்டு உயிர் எழுத்துக்களும் பதினெட்டு மெய் எழுத்துக்களுடன் சேர்வதால் (18 X 12) 216 உயிர் மெய் எழுத்துக்கள் பிறக்கின்றன. 
 
எடுத்துக்காட்டு: 
க, கா, கி, கீ, கு, கூ, கெ, கே, கை, கொ, கோ, கௌ 
ச, சா, சி, சீ, சு, சூ, செ, சே, சை, சொ, சோ ,சௌ 
 
  |  
 
   
 
ஆய்த எழுத்து என்பது தமிழ் கற்றலுக்கான, முதன்மைக் குறியீடு ஆகும். இது ஃ என்றவாறு மூன்று புள்ளி வடிவமாக இருக்கும். இதற்கு அஃகேனம், தனிநிலை, புள்ளி, ஒற்று என்னும் வேறு பெயர்களும் உண்டு. 
 
 ஆய்தம் என்ற முப்பாற்புள்ளியும் எழுத்து ஓரன்ன. 
 ('தொல்காப்பியம்', எழுத்திகாரம் 500 B.C.) 
 
இவ்வெழுத்தானது தனக்கு முன்னர் ஒரு குறிலையும், பின்னர் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்றே வரும். 
 
எ.கா: 
அஃது - 'அ' குறில். 'து' வல்லின உயிர்மெய்  
இஃது - 'இ' குறில். 'து' வல்லின உயிர்மெய் 
 
  |   
    
 
 |